சென்னை: `பாலியல் தொல்லை; கூலிப்படை ஏவி மருமகனைக் கொன்ற மாமியார்!’ – ஓராண்டுக்குப்பிறகு கைது – Vikatan

சென்னைச் செய்திகள்

இந்தச் சமயத்தில் சகுந்தலா குறித்த ரகசியத் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார் அவரைப் பிடித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் சகுந்தலா அதிர்ச்சிக்கரமான தகவல் ஒன்றை போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சகுந்தலாவின் மகளை பிரகாஷுக்குத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். திருவல்லிக்கேணியில் ஒன்றாகக் குடியிருந்து வந்திருக்கிறார்கள். அப்போது சகுந்தலாவின் இளைய மகளிடம் பிரகாஷ் அநாகரீகமாக நடந்திருக்கிறார். அதை சகுந்தலா கண்டித்திருக்கிறார். அப்போது சகுந்தலாவுக்கும் பிரகாஷ் பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்திருக்கிறார்.

கைது
Representational Image

பிரகாஷின் இந்தச் செயலைக் சகுந்தலா கண்டித்தும் அவர் திருந்தவில்லை. அதனால்தான் சகுந்தலா, கூலிப்படையை ஏவி பிரகாஷைக் கொலை செய்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதனால் சகுந்தலாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.

மகளுக்கும் மாமியாருக்கும் பாலியல் தொல்லைக் கொடுத்த மருமகன் கூலிப்படை ஏவி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தில் ஓராண்டுக்குப்பிறகு மாமியார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-mother-in-law-over-son-in-law-murder-case