சென்னையில் அடுத்த 15 நாட்களுக்கு போராட்டத்துக்கு தடை…. காவல் ஆணையர் உத்தரவு! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் இன்று நள்ளிரவு முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

ஊர்வலங்கள், பொதுக்கூட்டம், மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் ஆகியவை நடத்த தடை விதித்தும் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் பதற்றமான நேரங்களில், போராட்டக் காலங்களில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காலங்களில் பிரிவு 41-சென்னை நகர போலீஸ் சட்டம்-1888 -ன் கீழ் 15 நாட்களுக்கு ஊர்வலங்கள், பொதுக்கூட்டம் , உண்ணாவிரதம், பொது நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டம், கும்பலாகக் கூடுதல், மனிதச் சங்கிலி உள்ளிட்ட அனைத்துக்கும் காவல் அனுமதியின்றி நடத்தக்கூடாது என அறிவிக்கப்படும். தற்போது கொரோனா காரணமாக தொடர்ந்து இதுபோல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

imageகதை திருட்டு வழக்கு… இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்டு… எழும்பூர் நீதிமன்றம் அதிரடி!

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுளளதாவது:-

பிரிவு 41-சென்னை நகர போலீஸ் சட்டம்-1888 -ன் கீழ் இன்று இரவு 10 மணி முதல் வருகிற 14- ம் தேதி வரை 15 நாட்களுக்கு ஊர்வலங்கள், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம், மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கபப்டுகிறது என்று கூறியுள்ளார்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-maheshkumar-agarwal-has-ordered-a-ban-on-protests-in-chennai-from-midnight-feb-14-410504.html