பெங்களூர்: பெங்களூர் தேவனஹள்ளி பண்ணை வீட்டிலிருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டுள்ளார் சசிகலா.
சொத்துக் குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்த அவர் கடந்த 27 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டார். இதையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 31-ஆம் தேதி காலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அவர் ஒரு வாரம் கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் பெங்களூரிலிருந்து சென்னை வருகிறார். இதனால் ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா பயணம்.
அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா தமிழகம் வருகிறார்.
அதிமுக கொடியை பயன்படுத்த தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் கொடி.
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்புகிறார்.
38 மாவட்ட நிர்வாகிகளும் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்துள்ளனர்.
சசிகலாவுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து எந்த கட்டுப்பாடுகளும் இதுவரை விதிக்கப்படவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்ட டிஎஸ்பி விதித்த கட்டுப்பாடுகள் அந்த மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும்.
சசிகலா வருகை குறித்த கட்டுப்பாடுகளை விளக்கினார் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்.
பண்ணை வீட்டில் அமமுக நிர்வாகிகள் குவிந்துள்ளனர்.
6 அடி உயர வேல், திருப்பதி பிரசாதம் ஆகியவற்றுடன் சசிகலாவை வரவேற்க தயார் நிலை.
சசிகலா காருடன் 5 கார்கள் மட்டுமே பின்தொடர வேண்டும் என உத்தரவு.
விக்டோரியா மருத்துவமனையிலிருந்து பண்ணை வீடு வரை அதிமுக கொடியுடன் பயணம் செய்த சசிகலா.
கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை அழைத்து வரப்படுகிறார்.
செம்பரம்பாக்கம் தொடங்கி தி நகர் வரை 32 இடங்களில் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு.
கொடி, தோரணம், பேனர் அமைத்து உற்சாக வரவேற்பு அளிக்க திட்டம்.
ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் சசிகலாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டம்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/live-updates-sasikala-is-coming-to-chennai-after-4-years-411351.html