சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பெண்களின் புகைப்படங்களை எடுத்து அதை பொழுதுபோக்குக்காக பரசுராமன் மார்பிங் செய்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். புகார் கொடுத்த சென்னை மாணவி, பரசுராமனுக்கு நெருங்கிய உறவினர். அதனால் மாணவி குறித்த முழு விவரங்கள் பரசுராமனுக்கு தெரியும். அப்படியிருந்தும் மாணவியின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களிலிருந்து எடுத்த பரசுராமன், அதை மார்பிங் செய்ய தன்னுடைய செல்போனில் பிரத்தேயமாக ஆப்ஸ் ஒன்றை பதிவு செய்து வைத்திருந்தார். அதன்மூலம் மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அதை சமூகவலைதளங்களில் பதிவு செய்திருக்கிறார்.
பரசுராமனின் அப்பா தொழிலதிபர். அதனால் பரசுராமனுக்கு தனியறை, விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார், மேலும் பரசுராமன், கோவையில் உள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கொரோனா பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் அஜர்படுத்தபட்ட பரசுராமனை சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.
Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-engineer-student-in-morphing-case