சென்னை சேப்பாக்கத்தில் 2-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெற்றது.

சென்னை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதை தொடர்ந்து அலகாபாத் மற்றும் புனேவில் நடைபெறும் 5 டி-20 போட்டிகள் மற்றும்ம் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளன.

டெஸ்ட் தொடரின் முதல் 2 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அடுத்ததாக வரும் 13 ஆம் தேதி தொடங்க இருக்கும் 2வது டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 50 சதவீத இருக்கைகளுடன் ரசிகர்களை அனுமதிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கியது. பல்வேறு ஊர்களில் இருந்து ரசிகர்கள் ஆர்வத்திடன் டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர். ஆன்லைன் பதிவு  மூலமாகவும் டிக்கெட் விற்பனை நடைபெற்றது. பல மாதங்கள் கழித்து மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக டிக்கெட் வாங்க வந்தவர்கள் தெரிவித்தனர். 

Source: https://www.dailythanthi.com/News/State/2021/02/11130612/Tickets-on-sale-for-the-2nd-Test-at-Chepauk-in-Chennai.vpf