சென்னை: `பணம் கொடுத்தால் பதவிகள் கிடைக்கும்!’ – மோசடி வழக்கில் சிக்கிய தந்தை, மகன் – Vikatan

சென்னைச் செய்திகள்

இதையடுத்து மோசடி தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடியில் தனிப்படை அமைக்கப்பட்டது. மோசடி கும்பல் மைசூரில் பதுங்கியிருக்கும் ரகசிய தகவல் போலீஸாருக்க கிடைத்தது. உடனடியாக போலீஸார் மைசூருக்குச் சென்றனர். இந்த மோசடியில் மகாதேவய்யாவின் மகன் அங்கித், அவரின் நண்பரும் தரகருமான ஓம் என்பவருக்கும் தொடர்ப் இருப்பது தெரியவந்தது.

கைது
representational image

இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணயில் இவர்கள் பலரிடம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “மகாதேவய்யாவின் மகன் அங்கித். எம். இ படித்திருக்கிறார். இவர்தான் மோசடிக்கு மூளையாக செயல்பட்டிருக்கிறார். ஆளுநர், பிரதமர்., மாநில முதல்வர்கள் அலுவலக முத்திரைகள், ஐஏஎஸ் அதிகாரிகளின் கையெழுத்து ஆகியவற்றை போலியாக தயாரித்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-cheating-network-lead-by-father-son