சென்னை: திருமண நாளில் மணமகன் மாயம் – மணமகள் குடும்பத்தினர் மறியல்! – Vikatan

சென்னைச் செய்திகள்

மணமகன் வீட்டினரிடம் விவரத்தை மணமகள் வீட்டினர் கேட்டனர். ஆனால், சரியான பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து மணமகள் வீட்டினர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மணமகன் வீட்டினர் தங்களை ஏமாற்றி விட்டதாக புகாரளித்தனர். ஆனால், அந்தப் புகாரை போலீஸார் வாங்கிவில்லை என்று தெரிகிறது. அதைக் கண்டித்து காவல் நிலையம் முன்பு மணமகள் வீட்டினர் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர். அவர்களிடம் போலீஸார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சுமார் 2 மணி நேரத்துக்குப்பிறகு மணமகள் வீட்டினர் மறியலை கைவிட்டனர்.

திருமணம்
Representational Image

இந்தநிலையில் மணமகன் டில்லிபாபு உறவினர் வீட்டில் இருக்கும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக போலீஸார் அங்கு சென்று மணமகனை அழைத்து வந்தனர். மணமகனிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மணமகன் வீட்டினரும் மணமகள் வீட்டினரும் ஒருவொருக்கொருவர் மாறி மாறி போலீஸாரிடம் குற்றம்சாட்டினர். அதனால் போலீஸார் இருவீட்டினரிடமும் விசாரித்து வருகின்றனர். அதன்காரணமாக திருப்போரூர் முருகன் கோயிலில் நடக்க இருந்த திருமணமும் கொரட்டூரில் நடக்கவிருந்த வரவேற்பு நிகழ்ச்சியும் நின்றது. திருமணத்துக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-bridegroom-escaped-in-wedding-day