இதையடுத்து முகமது ஆசான் மீது புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் முகமது ஆசான் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். அவரின் செல்போனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் “முகமது ஆசானுக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த பிறகு இருவரும் வீடியோ காலில் பேசியிருக்கின்றனர்.
அப்போது அந்தப் பெண்ணின் ஆபாச படங்களை முகமது ஆசான் எடுத்திருக்கிறார். திருமணத்தை நிறுத்திய ஆத்திரத்தில் அந்தப் புகைப்படங்களை நண்பருக்கு அனுப்பியிருக்கிறார். முகமது ஆசான் யாருக்கெல்லாம் படங்களை அனுப்பினார் என்று விசாரிரத்து வருகிறோம்” என்றனர்.
விரைவில் திருமணம் நடைபெற உள்ள இளம்பெண்ணின் ஆபாச படங்கள் வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Source: https://www.vikatan.com/news/crime/chennai-man-arrested-in-leaking-of-private-photos