சென்னை: குழந்தை இல்லை; கொலையில் முடிந்த கொடூரம் – கணவரைத் தேடும் போலீஸ்! – Vikatan

சென்னைச் செய்திகள்

அதைப் பார்த்த பன்னீர்செல்வம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து உயிருக்குப் போராடிய கீர்த்தனாவை மீட்டு குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரின் பெற்றோர் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தனா இன்று உயிரிழந்தார். இது குறித்துத் தகவலறிந்த குன்றத்தூர் போலீஸார் கீர்த்தனாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கீர்த்தனா, பன்னீர்செல்வம்

இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார் பன்னீர்செல்வத்தைத் தேடிவருகின்றனர். இந்தத் தம்பதியருக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மனைவியை ஏன் பன்னீர்செல்வம் கொலை செய்தார் என்று தெரியவில்லை. அவரிடம் விசாரித்தால் மட்டுமே அதற்கான விடை கிடைக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.

மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-chrompet-police-books-husband-in-wife-murder-case