மேலும், அவனுக்கு வேறு பெண்களோடு பழக்கம் இருப்பதாகக் கூறினாள். நான் எனது மகளுக்கு ஆறுதல் கூறினேன். 22-ம் தேதி அதிகாலை நான் தூங்கி எழுந்தபோது சரண்யா படுத்திருந்தாள், பின்னர், நான் நடைபயிற்சிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது சரண்யா, மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள். உடனே நான் சத்தம் போட்டேன். அதனால் அனைவரும் ஓடி வந்து சரண்யாவை கீழே இறக்கி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.
அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சரண்யா ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினர். எனவே எனது மகள் சரண்யா, காதல் பிரச்னையால் மனஉளைச்சல் காரணமாக இறந்து விட்டாள். எனவே ஐசக் மனோஜ்குமார் என்பவரை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
புகாரின் பேரில் எஸ்.ஐ. ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து காதலன் ஐசக் மனோஜ்குமாரிடம் போலீஸார் விசாரித்து வருகிறார். ஐசக் மனோஜ்குமார், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
காதல் தோல்வியில் வங்கி ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
Source: https://www.vikatan.com/news/crime/bank-employee-commits-suicide-in-chennai