சென்னை நகைக்கடையில் திடீர் ஐ.டி. ரெய்டு : 8 கிலோ தங்கம் பறிமுதல் விவகாரத்தில் விடிய விடிய சோதனை! – Kalaignar Seithigal

சென்னைச் செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 24ஆம் தேதி ரயில்வே காவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோயம்புத்தூரில் இருந்து சென்னை வந்த இன்டர்சிட்டி ரயிலில் பயணம் செய்தவரிடம் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கோயம்புத்தூர் அசோக் நகர் விரிவாக்கம், பிரபு நகர், ராம் கௌரி நிவாஸ் பகுதியை சேர்ந்த திலிப் குமார் (51) என்பது தெரியவந்தது. மேலும் ரயில்வே போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் 8 கிலோவிற்கு மேல் தங்கத்தை ரயிலில் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைக்கப்பட்டது. திலீப்குமாரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 8 கிலோ தங்க நகைகளின் மதிப்பு மூன்று கோடிக்கும் மேல் இருந்த காரணத்தினால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வருமான வரி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

Source: https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/03/26/it-raid-in-jewelery-shop-in-chennai-nsc-bose-road