நிலைமை கையை மீறிபோகுது.. சென்னையில் மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா..! – Asianet News Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை கிண்டி எஸ்டேட்டில் உள்ள மத்திய பயிற்சி நிலையத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கிண்டி எஸ்டேட்டில் மத்திய பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு 200 பேர் படித்து வருகின்றனர். தையல் பயிற்சி, பிளம்பர் வேலைக்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு பணியாற்றும் ஆவடியைச் சேர்ந்த நபருக்கு கடந்த 19-ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பிறகு படிப்படியாக ஒவ்வொருவருக்கும் பரவ தொடங்கியது.  

தற்போது அங்கு பயிற்சி பெறும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு அறையிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தொற்று கண்டறியப்பட்டுள்ள கிண்டி பயிற்சி மையத்தில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

Source: https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/chennai-central-government-training-center-18-new-positive-cases-qqkmhl