சென்னை: லிஃப்ட் கொடுத்து உதவுவதுபோல் அழைத்து ஓடும் காரில் தாய், மகளுக்கு பாலியல் தொல்லை! – Vikatan

சென்னைச் செய்திகள்

இந்தநிலையில் கவிதா, செல்போன் மூலம் தன்னுடைய கணவருக்கு தகவல் தெரிவித்தார். அந்தத் தகவலை வைத்து, கவிதாவின் கணவர் அந்தக் காரை சிலரது உதவியுடன் கண்ணகி நகர் பகுதியில் வழிமறித்தார். பின்னர், காரிலிருந்தவர்களை பிடித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். இதற்கிடையில் தனக்கும் மகளுக்கும் நடந்த கொடுமை குறித்து கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கவிதா புகாரளித்திருக்கிறார். அதனால் கண்ணகி நகர் போலீஸார் இருவரையும் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸார் விசாரணை நடத்தியதில் ஓடும் காரில் பெண்ணுக்கும் அவரின் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் சிவகங்கை மாவட்டம், சிங்கனேரி தாலுகா, லேத் தெருவைச் சேர்ந்த சங்கர் (31), சென்னை துரைப்பாக்கம் பாண்டியன் சாலையைச் சேர்ந்த மனோஜ் (24 ) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஓடும் காரில் தாய், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், மாநகரில் பெண்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-mother-and-daughter-sexually-harassed-in-car-omr