சென்னை: செயின் பறிப்பில் ஈடுப்பட்ட இன்ஜினியர் – சிறை நண்பர்கள் சிக்கிய கதை! – Vikatan

சென்னைச் செய்திகள்

மேலும் இவர்கள் இருவரும் திருட்டு வழக்கில் கைதாகி திருத்தணி கிளை சிறையில் சில மாதங்களுக்கு முன் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அப்போதுதான் இருவரும் அறிமுகமாகியிருக்கின்றனர். பின்னர் சிறையிலிருந்து வெளியில் வந்த இருவரும் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்திருக்கின்றனர்.

டேனியல், சிவில் இன்ஜினீயரிங் படித்திருக்கிறார். மணிகண்டன் பி.காம் படித்திருக்கிறார். கொள்ளை வழக்கில் சிக்கிய டேனியலின் வாழ்க்கை திசைமாறிவிட்டது. அதைப்போல பைக் திருட்டில் கைதான மணிகண்டன், தற்போது செயின் பறிப்பு வழக்கிலும் சிக்கியிருக்கிறார். இவர்களிடமிருந்து 39 சவரன் தங்க நகைகள், கத்தி, இரண்டு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrest-engineer-and-his-friend-in-chain-snatching-case