8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021 – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

ஹைலைட்ஸ்:

  • 8ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதி உடையவர்களுக்கு மெட்ராஸ் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தோட்ட வேலை, தூய்மை பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் போன்ற பல வேலைவாய்ப்புகள் வெளியீடு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 6, 2021

உயர்நீதி மன்றம் Madras High Court 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

தற்போதைய உயர்நீதி மன்றம் வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 19 ஏப்ரல் 2021 அன்று இந்த அறிவிப்பை உயர்நீதி மன்றம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான உயர்நீதி மன்றம் ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 3557 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.

உயர்நீதி மன்றத்தின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் துப்புறவாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in என்ற உயர்நீதி மன்றத்தின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் பதவிகள் மற்றும் காலியிடங்கள்

ஆரம்ப தேதி ஏப்ரல் 19, 2021
சமர்ப்பிக்க இறுதி தேதி ஜூன் 6 ,20201
வேலைக்கான இடம் சென்னை

காலியிட விவரங்கள்:

பதவி காலியிடங்கள்
அலுவலக உதவியாளர் (Office Assistant) 1911
வாட்ச்மேன் (Watchman) 496
இரவு காவலாளி (Night watchman) 185
இரவு காவலாளி (மசால்ச்சி) (Night watchman cum Masalchi) 108
துப்புறவாளர் (Sweeper) 189
மசால்ச்சி (Masalchi) 485
சுகாதார ஊழியர் (Sanitary Worker) 110
தோட்டக்காரர் (Garderner) 28
நகல் எழுத்தாளர் (Copyist Attender) 03
படகோட்டி ஆண் மற்றும் பெண் (Waterman & Waterwomen) 01
அலுவலக முழுநேர காவலாளி (Office cum Full time watchman) 01
வாட்ச்மேன் (மசால்ச்சி) (Watchman cum Masalchi) 15
துப்புறவு தொழிலாளி (Sweeper cum Cleaner) 18
தூய்மை பணியாளர் (Scavenger/Sweeper) 07

கல்வித்தகுதி:

பணிக்கு விண்ணப்பிப்பவர் 8 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மிதிவண்டி ஓட்ட கூடியவராக இருக்க வேண்டும். தமிழ் மொழியை எழுதவும் படிக்கவும் தெரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களை அறிய அதிகாரபூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

வயது வரம்பு

யூ.ஆர்- 30 வயது

எம்.பி.சி மற்றும் டி.சி/ பி.சி.எம்/ பி.சி- 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

எஸ்.சி/ எஸ்.டி மற்றும் விதவைகள்- 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.

Source: https://tamil.samayam.com/jobs/govt-jobs/madras-high-court-8th-pass-qualification-sweeper-office-assistant-watchman-recruitment-2021-in-tamil/articleshow/82143623.cms