‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!’ – ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி! – Kalaignar Seithigal

சென்னைச் செய்திகள்

டூப்ளெஸ்சிஸும் சிறப்பாகவே ஆடிக்கொண்டிருந்தார். நன்றாக ஆடிய இந்த கூட்டணியால் பவர்ப்ளேயில் சென்னை அணி 54 ரன்களை சேர்த்தது. சமீபமாக பவர்ப்ளேயில் சென்னை அணி சேர்த்த அதிகப்படியான ஸ்கோர் இதுதான். தொடர்ந்து, ருத்ராஜ் கெய்க்வாட் நன்றாக ஆடி அரைசதம் கடந்தார். இதன்பிறகு, கியரை மாற்றி சிக்சர்களை பறக்கவிட்ட அவர் 64 ரன்கள் வருண் சக்கரவர்த்தி பந்தில் பெரிய சிக்சருக்கு முயன்று கேட்ச் ஆனார்.

12.1 ஓவர்களிலேயே சென்னை அணி 115 ரன்களை சேர்த்திருந்ததால், இனிமேல் அதிரடிதான் என்ற மனநிலைக்கு வந்தது. நம்பர் 3 இல் வந்த மொயீன் அலி 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களை அடித்து 25 ரன்களில் வெளியேறினார். அடுத்து கேப்டன் தோனி களமிறங்கி, தன் பங்குக்கு 2 பவுண்டரி மற்றும் சிக்சருடன் 17 ரன்களை சேர்த்தார்.

இன்னொரு பக்கம் டூப்ளெஸ்சிஸ் ருத்ரதாண்டவம் ஆடினார். ரஸலின் ஓவரில் தொடர்ந்தது மூன்று பவுண்டரிக்களை அடித்தவர், பேட் கம்மின்ஸின் ஓவரில் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த டூப்ளெஸ்சிஸ் 95 ரன்களை அடித்திருந்தார். கடைசி பந்தில் ஜடேஜா ஒரு சிக்சரை அடித்து சென்னை அணியின் இன்னிங்ஸை சிறப்பாக முடித்து வைத்தார்.

Source: https://www.kalaignarseithigal.com/sports/2021/04/22/ipl-2021-chennai-super-kings-beat-kolkata-knight-riders-by-18-runs