சென்னை: சரணடையப் போவதாகக் கூறிய இளைஞர் – ஆத்திரத்தில் கொன்று கடற்கரையில் புதைத்த நண்பர்கள் – Vikatan

சென்னைச் செய்திகள்

இந்தநிலையில் செல்வக்குமார் அவரின் நண்பர்கள் தினேஷ் என்கிற முட்டை பானை தினேஷ், நிஷாந்தன், முத்தமிழ், ஸ்ரீதர், வெற்றிவேல், சந்தோஷ், அர்ஜூன் ஆகியோருடன் சேர்ந்து ஜீரோ கேட் கடற்கரை மணலில் அமர்ந்து மது அருந்தியிருக்கிறார். அப்போது போதையிலிருந்த செல்வக்குமார், லோகேஷை தாக்கிய வழக்கில் எண்ணூர் காவல் நிலையத்தில் சரண் அடையப் போவதாகக் கூறியிருக்கிறார். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த அவரின் நண்பர்கள் பீர்பாட்டிலை உடைத்து செல்வக்குமாரை குத்தியிருக்கின்றனர். அதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

பின்னர் போதையிலிருந்த அவர்கள் செல்வக்குமாரின் சடலத்தை சிறிய அளவில் குழிதோண்டி புதைத்து விட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர். அதனால் சந்தேக மரணம் என பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றியிருக்கிறோம். செல்வக்குமாரை கொலை செய்த வழக்கில் தினேஷ், நிஷாந்தன், முத்தமிழ், ஸ்ரீதர் ஆகிய 4 பேரை கைது செய்திருக்கிறோம். மற்றவர்களை தேடிவருகிறோம்” என்றனர்.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-youth-murdered-his-friends-buried-in-gate-zero-beach