சென்னை: தம்பியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணன்கள் சிக்கியது எப்படி? – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை அருகே உள்ள மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம், சோழன் நகரைச் சேர்ந்தவர் கோவில்ராஜ் (25). மது பழக்கத்துக்கு அடிமையான இவர் தினமும் குடித்துவிட்டு குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபவது வழக்கம். நேற்றிரவு மது அருந்திவிட்டு போதையில் வீட்டிற்கு வந்த கோவில்ராஜ், வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் வீட்டின் வெளியில் படுத்து உறங்கியிருக்கிறார். காலையில் கோவில்ராஜ் இறந்துவிட்டதாக அவரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இந்தத் தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினமே அவசர அவசரமாக கோவில்ராஜின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் கோவில்ராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் நண்பர் ஒருவர் மாங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், கோவில்ராஜின் அம்மா சாராள் (50), அண்ணன்கள் மதன்ராஜ் (27), மைக்கேல்ராஜ் (29) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவில்ராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-youth-murdered-by-his-brothers-arrested