சென்னை: அதிகாலையில் காரில் கடத்தல்… கணவனை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! – Vikatan

சென்னைச் செய்திகள்

இந்தநிலையில் சித்ராவை காரில் அழைத்துச் சென்றது சக்திவேல் என்பவர் என்று தெரிந்தது. இவர், சித்ராவின் சகோதரர் சங்கர் குடியிருக்கும் பகுதியிலுள்ள டீக்கடையில் வேலை பார்த்துவருகிறார். அதனால் சங்கருடன் சக்திவேலுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு சங்கரின் தங்கை சித்ராவும் சக்திவேலுக்கு அறிமுகமாகியிருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் சித்ராவை அழைத்துச் சென்ற சக்திவேல், அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சித்ராவை அடைத்துவைத்து பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில தெரியவந்தது.

இதையடுத்து சித்ராவை அடைத்துவைத்திருந்த இடத்தை போலீஸார் கண்டறிந்தனர். அங்குச் சென்ற போலீஸார் சித்ராவை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் சக்திவேல் மீது சித்ரா சரமாரியாகப் புகாரளித்தார். அதன்பேரில் சக்திவேலை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

அதிகாலை நேரத்தில் இளம்பெண்ணை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source: https://www.vikatan.com/news/crime/women-kidnapping-in-chennai-and-sexually-abused