லோகநாதனின் சகோதரர் குமார் என்பவர் சோழவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், கொரோனாவால் கல்லூரிகள் மூடியுள்ள நிலையில் கிடைத்த வேலைகளை லோகநாதன் செய்துவந்தார். லோகநாதனின் மனைவி சாந்தி, நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அதனால் அவர் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். தனியாக இருந்த லோகாநாதன், அலமாதி, கிருஷ்ணாநகர் பகுதியில் உள்ள ஏரிக்கரையிலிருக்கும் பனைமரத்தில் ஏறி நுங்கை வெட்டியிருக்கிறார். அப்போது அவர் கீழே விழுந்து காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அவரின் சடலத்தை பிரேத பரிசேதனைக்குப்பிறகு ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பேராசிரியராக வேலைப்பார்த்த லோகநாதன், வருமானமின்றி தவித்த காரணத்தால் பனை மரத்தில் ஏறி நுங்கை வெட்டியபோது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அலமாதி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆதரவின்றி தவிக்கும் லோகநாதனின் மனைவியான கர்ப்பிணி சாந்திக்கும் அவரின் மகன் பிரியனுக்கும் அரசு உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலமாதி கிராம மக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
Source: https://www.vikatan.com/news/crime/professor-death-after-fallen-from-palm-tree