சென்னை: பெண்ணைக் கொன்று தீயிட்டு எரித்த கொடூரம்! 5 சவரன் செயினால் நடந்த விபரீதம்! – Vikatan

சென்னைச் செய்திகள்

இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் ரேவதி, தூய்மை பணியாளராகப் பணியாற்றி வந்தார். அவருடன் தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி ஜில்லா, பட்டான்சேரு கிராமத்தைச் சேர்ந்த திம்மப்பா (24) என்பவர் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். ரேவதிக்கும் திம்மப்பாவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் கடந்த 16.6.2021-ம் தேதி ரேவதி, தன்னுடைய 5 சவரன் தங்கச் செயினை திம்மப்பாவிடம் கொடுத்திருக்கிறார். அதை மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் உள்ள அடகு கடையில் 35,000 ரூபாய்க்கு திம்மப்பா அடகு வைத்திருக்கிறார்.

அடகு வைத்த பணத்தில் 20,000 ரூபாயை ரேவதியும் 15000 ரூபாயை திம்மப்பாவும் பங்கு பிரித்திருக்கின்றனர். அதன்பிறகு 16-ம் தேதியிலிருந்து 20-ம் தேதி வரை வரை ரேவதி வேலைக்குச் செல்லவில்லை. 21-ம் தேதி ரேவதி வேலைக்குச் சென்றபோது அவரின் கணவரிடமிருந்து கடிதம் வாங்கி வரச் சொல்லியிருக்கிறார் சூப்பர்வைஸர் கமலக்கண்ணன். அதனால் வீட்டுக்கு வந்த ரேவதி, அன்றைய தினம் மாலை ஆலம்பாக்கத்துக்குச் செல்வதாகக் குழந்தைகளிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். மதுரவாயல் மேம்பாலத்தின் கீழே திம்மப்பாவை ரேவதி சந்தித்து பேசியிருக்கிறார். அதன்பிறகு திம்மப்பாவின் பைக்கில் ரேவதி சென்றிருக்கிறார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-corporation-women-employee-murdered-by-her-colleague