சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கம் – எந்தெந்த நேரத்தில் யார் யார் பயணம் செய்யலாம் தெரியுமா – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் சென்னையில் புறநகர் ரயில் சேவை இயக்கப்படுகிறது. பெண்களுடன் பயணிக்கும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எப்போதும் பயணிக்கலாம் எனவும் ஆண்கள் பீக் ஹவர்ஸ் நேரங்கள் தவிர பிற நேரங்களில் மட்டுமே பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சென்னையில் புறநகர்களின் சேவை குறைக்கப்பட்டது. முன்களப்பணியாளர்கள், வேலைக்கு செல்பவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அரசு அனுமதித்துள்ள நிலையில் மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் இன்று முதல் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சூப்பர்.. சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொது மக்கள் பயணிக்கலாம்.. ஆண்களுக்கு மட்டும் நிபந்தனைசூப்பர்.. சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொது மக்கள் பயணிக்கலாம்.. ஆண்களுக்கு மட்டும் நிபந்தனை

பெண்கள் எப்போது பயணிக்கலாம்

பெண்கள் , பெண்களுடன் பயணிக்கக்கூடிய 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்றும் , ஆண்கள் பீக்ஹவர்ஸ் என்று சொல்லப் படும் முக்கிய நேரத்தைத் தவிர்த்து பிற நேரங்களில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட நேரத்தில் பயணிக்க அனுமதி

காலை 7 மணி முதல் 9.30 மணி வரையிலும மாலை 4.30 மணி முதல் 7 மணி வரையிலும் ஆண்கள் பயணிக்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரையும் , இரவு 7 மணி முதல் கடைசி நேரம் வரையிலும் ஆண்கள் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்

அதேபோல் ரயில்கள் இயக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துள்ள தெற்கு ரயில்வே மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், நீதிமன்றப் பணியாளர்கள்,அத்தியாவசிய பணியாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் ரயிலில் பயணிக்கலாம் என அனுமதி அளித்துள்ளது.

ரிட்டன் டிக்கெட்

தொலைதூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களை பொருத்தவரை ஒரு வழிப்பயணம் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு ரிட்டன் டிக்கெட் அளிக்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Suburban train service in Chennai with corona control rules. Southern Railway has announced that children under the age of 12 traveling with women can always travel and men can only travel at times other than peak hours.

Source: https://tamil.oneindia.com/news/chennai/suburban-trains-resume-services-in-chennai-from-today-424992.html