”சட்டவிரோத குவாரிகளை கட்டுப்படுத்த திடீர் சோதனை நடத்தலாம்” – சென்னை உயர் நீதிமன்றம் கருத்து! – Kalaignar Seithigal

சென்னைச் செய்திகள்

குவாரி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்டவிரோத குவாரிகள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், சட்டவிரோத குவாரிகளை திடீர் ஆய்வுகள் செய்யவும், மாபியாக்களையும் கட்டுப்படுத்தவும் குழுக்களை அமைக்கலாம் என அரசுக்கு யோசனை தெரிவித்தனர்.

மேலும், நான்கு வாரங்களில் இதுசம்பந்தமாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

Source: https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/06/29/chennai-hc-asks-tn-govt-to-set-committee-on-illegal-quarries