புனேவில் இருந்து சென்னை வந்த 5 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

புனேவில் இருந்து 2-வது நாளாக நேற்று 5 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 69 லட்சத்து 26 ஆயிரத்து 880 தடுப்பூசிகள் வந்து உள்ளன. நேற்று முன்தினம் இரவு புனேவில் இருந்து பெங்களூரு வழியாக 5 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் வந்தன.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று இரவு புனேவில் இருந்து ஐதராபாத் வழியாக சென்னைக்கு 31 பெட்டிகளில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 410 தடுப்பூசிகள் வந்தன. அவை விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதேபோல் விமானத்தில் 14 பெட்டிகளில் வந்த 1 லட்சத்து 68 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ள மத்திய சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/07/12011128/5-lakh-30-thousand-vaccines-from-Pune-to-Chennai.vpf