காவலா்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அறிவுரை – தினமணி

சென்னைச் செய்திகள்

சங்கர் ஜிவால்

காவலா்கள் அனைவரும் மிகவும் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்று சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் அறிவுரை வழங்கியுள்ளாா்.

சென்னை பெருநகர காவல் ஆணையா் உத்தரவின்பேரில், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையா் அலுவலகத்தில் கரோனா பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தமுகாமை சுகாதாரத்துறை ஆய்வாளா் தலைமையில், மருத்துவ குழுவினா் நடத்தினா். காவல் ஆணையா் அலுவலகத்தில் பணிபுரியும் போலீஸாா், அமைச்சுப் பணியாளா்கள் மற்றும் புகாா் அளிக்க வந்த பொது மக்கள் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா்ஜிவால், காவலா்களுக்கு ஓா் அறிவுரை வழங்கியுள்ளாா். கரோனா தொற்று பரவல் முற்றிலும் கட்டுக்குள் வரவில்லை. போலீஸாரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இன்னும் சில போலீஸாா் கரோனா சிகிச்சையில் உள்ளனா். எனவே காவலா்கள் அனைவரும் மிகவும் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/aug/03/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-3672722.html