சென்னை போரூர்- கோடம்பாக்கம் வரை இரு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம் இதோ! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட பணிகள் காரணமாக சென்னை- போரூர் முதல் கோடம்பாக்கம் வரை போக்குவரத்துகள் இரு நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னையில் மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணிகள் காரணமாக ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பில் இருந்து போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலை வழியாக சென்னை மெட்ரோ இரயில் 2ம் கட்டபணி துவங்க உள்ளதால் இன்று 08-08-2021 மற்றும் 09-08-2021 ஆகிய இரண்டு நாட்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

பட்டியலின மக்கள் குறித்து இழிவாக பேட்டி:நடிகை மீரா மிதுன் 7 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குபட்டியலின மக்கள் குறித்து இழிவாக பேட்டி:நடிகை மீரா மிதுன் 7 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு

கோடம்பாக்கம் மேம்பாலம்

அதன்படி போரூர் மார்க்கத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் ஆற்காடு சாலையில் செல்லலாம். இந்த வாகனங்களுக்கு எவ்வித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவில்லை. ஆற்காடு சாலையில் 80 அடி சாலை சந்திப்பில் இருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை ஒருவழி பாதையாக மாற்றப்பட உள்ளது.

மார்க்கத்தில் இருந்து சாலிகிராமம்

கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்தில் இருந்து சாலிகிராமம், போரூர் நோக்கி செல்லும் வாகனங்கள் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை, அசோக்நகர் 2வது அவென்யூ சாலை, பி.டி.ராஜன் சாலை, ராஜமன்னார் சாலை, 80அடி சாலை, ஆற்காடு சாலை வழியாக செல்லலாம்.

வடபழனி சந்திப்பு

கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து வடபழனி சந்திப்பிற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை, அசோக்நகர் 2வது அவென்யூ சாலை, ஜவஹர்லால் நேரு 100 அடி சாலை வழியாக வடபழனி சந்திப்பை அடையலாம்.

கே கே நகர்

போரூர் மார்க்கத்தில் இருந்து கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் 80 அடி சாலையில் வலதுபுறம் திரும்ப அனுமதி இல்லை. மாறாக ஆற்காடு சாலையில் நேராக சென்று வடபழனி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பி.டி.ராஜன் சாலை வழியாக கே.கே.நகர் செல்லலாம்.

அசோக் பில்லர் மார்க்கம்

அசோக் பில்லர் மார்க்கத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் சாலையில் அசோக்நகர் காவல் நிலையம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அசோக் நகர் 2-வது அவென்யூ சாலை, துரைசாமி சாலை, ஆற்காடு சாலை வழியாக கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லலாம்.

துரைசாமி சாலை

வடபழனி சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் துரைசாமி சாலையில் வலதுபுறம் திரும்ப அனுமதி இல்லை. மாறாக ஆற்காடு சாலையில் நேராக சென்று பவர்ஹவுஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி செல்ல வேண்டும். அதேபோல் கே.கே.நகரில் இருந்து பி.டி.ராஜன் சாலை வழியாக வரும் வாகனங்கள் ராஜமன்னார் சாலையில் வலதுபுறம் திரும்ப அனுமதி இல்லை. மாறாக இடதுபுறம் திரும்பி 80 அடி சாலை வழியாக ஆற்காடு சாலை சென்று அடையலாம்.

வன்னியர் தெரு

வன்னியர் தெருவில் இருந்து ராஜமன்னார் சாலையில் வரும் வாகனங்கள் நேரே செல்ல அனுமதி இல்லை. மாறாக 80 அடி சாலை வழியாக ஆற்காடு சாலை சென்று செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம். கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வடபழனி மேம்பாலம் சர்விஸ் சாலையில் வரும் வாகனங்கள் வடபழனி சந்திப்பில் நேராக செல்ல அனுமதி இல்லை. இடதுபுறம் திரும்பி ஆற்காடு சாலை சென்று பவர்ஹவுஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை வழியாக அசோக் பில்லர் நோக்கி நேராக செல்லலாம். இவ்வாறு காவல் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Traffic diverted from Chennai porur- kodambakkam because of Metro train project 2nd phase.

Source: https://tamil.oneindia.com/news/chennai/traffic-diverted-from-chennai-porur-kodambakkam-429349.html