சென்னை: ஒரு பிரபலமான ஹோட்டலில் சாப்பாட்டில் பல்லி இருந்திருக்கிறது.. இதையடுத்து, போலீஸ் விசாரணை துவங்கிய நிலையில் சென்னையில் பரபரப்பு கூடி உள்ளது.
சென்னை குரோம்பேட்டை, ஜிஎஸ்டி சாலையில் பிரபல ஹோட்டல் இயங்கி வருகிறது.. ஒரு ஊரின் பெயரிலான இந்த ஹோட்டல் கடந்த 4 வருடமாகவே இங்கு செயல்பட்டு வருகிறது…
பிரபலமான ஹோட்டல் என்பதால், எந்நேரமும் வாடிக்கையாளர்கள் இந்த ஹோட்டலுக்கு வந்து செல்வது வழக்கம்.
அந்த வகையில், பாளையங்கோட்டையை சேர்ந்த இசக்கி என்பவர் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் இந்த ஹோட்டலுக்கு சாப்பிட போனார்.. முதலில் வெள்ளை சாதம் போட்டுள்ளனர்.. அதற்கு பிறகு சாம்பார் ஊற்றி உள்ளனர்.. அந்த சாம்பாரில்தான் பல்லி ஒன்று இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்…
இட்லி வேணுமா.. இடியாப்பம் வேணுமா.. இலவசமாக எடுத்துட்டு போங்க.. பட்டுக்கோட்டை ஹோட்டல் ஓனர் தாராளம்
இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டவுடன், அந்த உணவகத்தினர் மீதமிருந்த மற்ற சாப்பாடுகளை கீழே கொட்டிவிட்டனர்… இதுகுறித்து தகவலறிந்து பல்லாவரம் நகராட்சி அலுவலக சுகாதார அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்குள் நுழைந்து அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்…
ஆனாலும், இசக்கி, குரோம்பேட்டை ஸ்டேஷனில் புகார் தந்தார்.. அந்த புகாரின் பேரில் ஹோட்டல் மேனேஜர் தர்மதுரை என்பவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். சென்னையின் பிரபல ஹோட்டலிலேயே இந்த கதி என்றால், சாமான்யர்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம்? என்ற கேள்விகள் நம்மிடம் எழுகின்றன..!
Source: https://tamil.oneindia.com/news/chennai/lizard-in-meals-customer-gave-police-complaint-to-famous-hotel-in-chennai-chromepet-429600.html