மழைநீர் சேகரிப்பு குழாய் சீரமைப்பில் மண் சரிந்து விழுந்தது இதில் 3 பேர் சிக்கி கொண்டனர். இதில் 2 பேர் மீட்கப்பட்டனர்.
சென்னை
சென்னை வண்ணாரபேட்டையில் 20 அடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்பு குழாய் சீரமைக்கும் பணிநடைபெற்றது. அப்போது மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் சிக்கி கொண்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் போராடி 2பேரை மீட்டனர். மேலும் ஒருவரை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Source: https://www.dailythanthi.com/News/State/2021/08/25163458/In-Chennai-Washermenpet-Landslide-accident-in-deep.vpf