சென்னைக்கு 382 வயதானதை முன்னிட்டு சென்னையில் உள்ள போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் என்ற 164 வருட பாரம்பரியமிக்க போட்டோகிராபி அமைப்பு சூட் மெட்ராஸ் என்ற தலைப்பில புகைப்பட போட்டியினை நடத்தியது.
கொரோனா காலத்து சென்னை,சென்னை மக்களின் கருணை என்பது போன்ற தலைப்புகளில் ஆன்லைனில் புகைப்பட போட்டி நடத்தப்பட்டது பொதுப்பிரிவு மற்றும் மாணவர் பிரிவு என்ற இரு தலைப்புகளில் நடந்த போட்டிகளில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.பத்து படங்கள் தேர்வு செய்யப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா வருகின்ற 28 ந்தேி சூம் வாயிலாக நடைபெறுகிறது.
போட்டிக்கான ஏற்பாடுகளை பிஎஸ்எம்.,அமைப்பின் தலைவர் ஜி.வி.பாலசுப்பிரமணியன் செய்திருந்தார்.
ஒலிம்பிக்கை படம் எடுத்த சுகுமாரின் அனுபவங்கள்
காவல்துறையின் பெருமை சொல்லும் காலப்பெட்டகம்
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2830477