Local elections: madras high court order to the State Election Commission || உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரி அதிமுக அளித்த மனுவை பரிசீலித்து பதிலளிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்.,6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலை ஒரே கட்டமாக நடத்த உத்தரவிட வேண்டும் என அதிமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 

மேலும், உள்ளாட்சி தேர்தலில் மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரியும் அதிமுக மனு அளித்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை வந்தது. . அப்போது, ‘ஊரக உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும், என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. 

மேலும், உள்ளாட்சி தேர்தலில் மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரிய அதிமுக.,வின் மனுவை பரிசீலித்து செப்.,29க்குள் பதிலளிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/09/24135210/Local-elections-madras-high-court-order-to-the-State.vpf