சென்னை மெரினா கடலில் தடையை மீறி குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் அலையில் சிக்கி காணாமல் போயினர்.
மெரினா கடற்கரைக்கு வந்த பள்ளி மாணாக்கர் 11 பேர் கண்ணகி சிலை அருகே கடலில் குளித்து விளையாடினர். அப்போது 2 மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கினர். இதில் ஆகாஷ் என்ற மாணவனை அவனது நண்பர்களே காப்பாற்றினர். மற்றொரு மாணவன் தனுஷ் என்னவானான் எனத் தெரியவில்லை.
இதேபோல் சைதாப்பேட்டையைச் சேர்ந்த கோதண்டராமன் என்ற மாணவனும் நண்பர்களுடன் மெரினா கடலில் குளித்தபோது காணாமல் போயுள்ளார். இரவு காரணமாக நிறுத்தப்பட்ட தேடும் பணி, இன்று தொடர்ந்து நடைபெறும் என்று தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Source: https://www.puthiyathalaimurai.com/newsview/118912/Chennai-2-students-were-trapped-in-a-wave-while-bathing-in-the-sea-in-violation-of-the-ban