இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம்: உயர் நீதிமன்றம் அதிருப்தி! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

ஹைலைட்ஸ்:

  • இழப்பீடு வழங்கும் போது சமச்சீரான நடைமுறையில் வழங்கப்பட வேண்டும்
  • இழப்பீடு வழங்குவது தொடர்பாக விதிமுறைகளை 8 வாரங்களுக்குள் தமிழக அரசு வகுக்க வேண்டும்

வாகனத்தில் செல்லும் போதும், நடைபாதை பாதையில் நடந்து சென்றவர் மீதும், மரம் முறிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும், சக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மாணவர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாகவும் உரிய இழப்பீடு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக மனுதாரின் ஆவணங்கள் ஆராயப்பட்டு முறையாக இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இழப்பீடு வழங்கும் நடைமுறையில் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஒரு சிலருக்கு ஒரு கோடி ரூபாய், அரசு வேலை வழங்கப்படுகிறது. ஒரு சிலருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது என்று தமிழக அரசு மீது நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
புதிதாக கல்லூரிகள் துவங்க கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்!
இழப்பீடு வழங்கும் போது சமச்சீரான நடைமுறையில் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, இழப்பீடு வழங்குவதில் எவ்வித பாரபட்சமும் காட்டக்கூடாது. துயரங்களில் ஏற்படும் மரணங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக விதிமுறைகளை 8 வாரங்களுக்குள் தமிழக அரசு வகுக்க வேண்டும். அதன் படியே இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/madras-hc-dissatisfaction-over-discrimination-in-the-provision-of-compensation/articleshow/87718442.cms