சென்னை கொடுத்த குட்டி ட்விஸ்ட்.. தோனியை விட ஜடேஜாவுக்கு அதிக தொகை ஏன்? – Kalaignar Seithigal

சென்னைச் செய்திகள்

ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன்பாக எட்டு அணிகளும் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

சென்னை அணியும் தாங்கள் தக்கவைத்துக் கொள்ளப்போகும் 4 வீரர்களை அறிவித்திருந்தது.

எதிர்பார்த்ததை போலவே தோனி, ஜடேஜா, மொயீன் அலி, ருத்துராஜ் கெய்க்வாட் இந்த நான்கு வீரர்களே தக்க வைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், இதில் ஒரு சிறிய ட்விஸ்ட்டை சென்னை அணி வைத்திருக்கிறது.

அதாவது, முதல் வீரராக தோனியை தக்க வைக்காமல் ஜடேஜாவை தக்க வைத்திருக்கின்றனர். இதன்மூலம் ஜடேஜாவுக்கு 16 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டும். இரண்டாவது வீரராகவே தோனி தக்க வைக்கப்பட்டிருக்கிறார். தோனிக்கு 12 கோடி ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டும். தோனி மாதிரியான மாபெரும் வீரர் அணியில் இருக்கும்போது அவரை விட அதிக தொகைக்கு இன்னொரு வீரரை ஒப்பந்தம் செய்திருப்பது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்திருக்கிறது.

இத்தனை சீசன்களாக சென்னை அணியில் அதிக ஊதியம் பெறும் வீரராக தோனியே இருந்திருக்கிறார். இனிமேல் அப்படி இருக்கப்போவதில்லை. ஆனால், இந்த முடிவை சென்னை அணி நிர்வாகம் எடுத்திருப்பதாக தெரியவில்லை. அவர்களை பொறுத்தவரைக்கும் சென்னை அணிக்கு தோனிதான் எப்போதும் முதல் சாய்ஸ். அவருக்குதான் எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும். இதை வெளிப்படையாகவும் அறிவித்திருந்தார்கள்.

Source: https://www.kalaignarseithigal.com/sports/2021/12/01/chennai-super-kings-retain-ravindra-jadeja-for-rs-16-crore-ms-dhoni