நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த 7 பேருக்கு ஒமிக்ரான்? அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

ஹைலைட்ஸ்:

  • நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த 7 பேருக்கு ஒமிக்ரான்?
  • மரபணு பரிசோதனைக்காக காத்திருப்பு
  • அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

சென்னை இராணி மேரி கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் நடத்தும் கொரோனாவிழிப்புணர்வு மற்றும் சிறப்பு தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ராணிமேரி கல்லூரியின் முதல்வர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

இராணி மேரி கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி உள்ள நிலையில், இன்னும் 900 மாணவிகள் மட்டுமே தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. கல்லூரி மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அரசின் உத்தரவை, இராணி மேரி கல்லூரி முறையாக பின்பற்றி, தங்களுடைய பணியை செய்து வருகிறது. தமிழகத்திலே 100% தடுப்பூசி செலுத்திய கல்லூரியில் ராணி மேரி கல்லூரி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கு மரபணு மாற்றம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய குடும்பத்தினரையும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நைஜீரியாவில் இருந்து வந்தவரால் அவருடைய குடும்பத்தினர் 6 பேருக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது. அவர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளார். அதனால் தான் அதிகளவு பாதிப்பு ஏற்படவில்லை.

நைஜீரியாவில் இருந்து வந்தவர், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மரபணு பரிசோதனை முடிவுகளை உடனடியாக அனுப்ப வேண்டும் என பெங்களூர் ஆய்வகத்திடம் கேட்டு உள்ளோம்.

கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் உள்ள விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்ததில் 40 நபர்களுக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளது. அதில் நான்கு நபர்களுக்கு டெல்டா என தெரியவந்துள்ளது மீதமுள்ள 36 நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 12039 நபர்களுக்கு பரிசோதனை செய்து வீட்டு தனிமையில் உள்ளனர்.

நைஜீரியாவில் இருந்து வந்தவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் என 7 பேருக்கும் அறிகுறியற்ற (asymptomatic) தான் உள்ளது. மேலும் அவர்களுக்கு ஆக்சிஜன் தேவை உள்ளிட்ட நிலை தற்போது வரை இல்லை. அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என தெரிவித்தார்.
தேங்கி நிற்கும் மழை நீர்: நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் சென்னை புறநகர் பகுதி மக்கள்தொடந்து பேசிய மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன்,

தமிழகத்தில் 1,20,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.40000 ஆக்சிஜன் படுக்கைகள் ,10000 மேற்பட்ட வேண்டிலேட்டார் படுக்கைகள் தயார்நிலையில் உள்ளது. தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது மற்றும்18 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைத்துள்ளோம்.3ம் தடுப்பூசி செலுத்துவற்கு மத்திய அரசு தற்போது வரை அனுமதி வழங்கவில்லை” என தெரிவித்தார்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/omigron-for-7-people-who-came-to-chennai-from-nigeria/articleshow/88299686.cms