வீட்டு தனிமையில் இருப்பவர்களா நீங்கள்.. அப்படினா கண்டிப்பாக இதை படியுங்கள்.. சென்னை மாநகராட்சி முக்கிய தகவல்.! – Asianet News Tamil

சென்னைச் செய்திகள்

Chennai, First Published Jan 10, 2022, 7:54 AM IST

கொரோனா பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துகளையே எடுத்துக்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;-

* தனி கழிவறையுடன் கூடிய காற்றோட்டம் உள்ள தனிஅறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* வீட்டில் உள்ளவர்கள் உங்கள் அறையில் நுழையக் கூடாது.

* சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும், மற்றவர்களிடம் தொடர்பு இல்லாதவாறு உணவை பெற்றுக்கொள்ளுங்கள்.

* போதுமான அளவு தண்ணீர், பழரசம் குடிக்கவும், பிறரிடம் பேசுவதை தவிர்த்து விடுங்கள், மீறி தொடர்பு கொள்ள நேரிட்டால் சர்ஜிக்கல் அல்லது என் 95 முகக்கவசம் அணிந்து பேசுங்கள்.

* போதிய ஓய்வும், தூக்கமும் அவசியம், சோர்வு ஏற்படுத்தும் செயல்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

* அடிக்கடி சோப்பு உபயோகித்து குறைந்தது 20 நொடிகள் நன்கு தேய்த்து நன்றாக கைகளை கழுவுங்கள் அல்லது ஆல்கஹால் கலந்து கிருமி நாசினியை பயன்படுத்துங்கள்.

* மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

* உங்கள் துணிகள் மற்றும் பாத்திரங்களை நீங்களே சுத்தம் செய்யுங்கள், பொருட்களை மற்றவர்களிடம் பகிரக் கூடாது. 

* கழிவுகளை தனி பையில் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.

* பல்ஸ், ஆக்சிமீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவையும், அபாய அறிகுறிகளையும் கண்காணிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Last Updated Jan 10, 2022, 7:54 AM IST

Source: https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/are-you-home-quarantine-chennai-corporation-information-r5h2p8