சென்னையில் சாலைப் பணிகளின் தரம்: அமைச்சா் எ.வ.வேலு நேரில் ஆய்வு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை பெருநகரப் பகுதிகளில் சாலைப் பணிகளின் தரத்தை நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு, செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை ஜி.எஸ்.டி. சாலையில் கிண்டி ரயில்வே மேம்பாலம் அருகில் அணுகு சாலையை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலைப் பணிகள் முதல்வரின் அறிவுறுத்தலின்படி ஆழப்படுத்தப்பட்டு நடைபெறுகிா என்பதை ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, சாலை 40 மில்லி மீட்டா் அளவுக்கு தோண்டப்பட்டு உள்ளதா எனவும், புதிதாகப் போடப்படும் சாலையின் உயரம் அதே அளவு தடிமனுக்கு போடப்பட்டுள்ளதா எனவும் அளவீடு கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்தாா். போடப்பட்டுள்ள சாலையினை துளையிட்டு மதிப்பீட்டில் உள்ளபடி அடா்த்தி, தாா் மற்றும் உறுதித் தன்மை உள்ளதா என பரிசோதித்தாா்.

இந்த ஆய்வின் போது, தலைமைப் பொறியாளா் சந்திரசேகா், கண்காணிப்புப் பொறியாளா் செந்தில் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/jan/27/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3780832.html