சென்னை புத்தக காட்சியை விரைவில் நடத்த முதல்வரிடம் கோரிக்கை | www.patrikai.com – patrikai.com

சென்னைச் செய்திகள்

சென்னை

விரைவில் சென்னை புத்தக காட்சியை நடத்த வேண்டும் என முதல்வரிடம் பபாசி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வருடா வருடம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து பொங்கல் வரை சென்னையில் புத்தக் காட்சி நடைபெறுவது வழக்கமாகும்.   அவ்வகையில் இந்த வருடமும் இந்த புத்தக காட்சியை நடத்தும் பபாசி அமைப்பினர் புத்தக் காட்சி ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவித்தனர்.

கொரோனா  பரவல் அதிகரிப்பு காரணமாகப் பல நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.  அவற்றில் சென்னை புத்தக காட்சியும் ஒன்றாகும்.  இவ்வாறு புத்தக காட்சி ஒத்தி வைக்கப்பட்டதால் ஏராளமான புத்தகங்கள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளன.

தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதால் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது.  எனவே சென்னை புத்தக காட்சியை விரைவில் நடத்த அனுமதி கோரி பபாசி அமைப்பினர் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து பபாசி துணைத்தலைவர் மயில வேலனிடம் மருத்துவ வல்லுநர்களுடன் தாம் இது குறித்து ஆலோசிப்பதாகவும் அவர்கள் ஆலோசனைப்படி முடிவு எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Source: https://patrikai.com/bapasi-requested-cm-to-allow-to-conduct-chennai-book-fair-soon/