சென்னை: தமிழக தலைநகரமான சென்னை மாநகராட்சியில் மண்டத்திற்கு ஒரு வாக்கு எண்ணிக்கை மையம் என மொத்தமாக 15 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வார்டுக்கு இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு உள்ளது. சில மணிநேரங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்றவர்கள் யார் யார் என்று தெரியவந்து விடும்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் மொத்தம் 12,820 வார்டுகள் உள்ளன. ஏற்கெனவே 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள வார்டு உறுப்பினர் பதவிகளை பிடிக்க 57,746 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது. கொரனா பரவல் காலம் என்பதால் அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. யாருக்கு வாக்கு என்பதை வேட்பாளர்கள் அல்லது முகவர்களிடம் காண்பித்த பிறகே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தபால் வாக்குகள் முடிந்த பிறகு ஸ்டார்ங் ரூமில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்குள் எடுத்து வரப்படும்
வார்டு வாரியாக பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு எண்ணப்படுகிறது. வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகளும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் காட்டப்படும் எண்ணிக்கையும் சரியாக இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படும்.
சென்னை மாநகராட்சியில் மண்டத்திற்கு ஒரு வாக்கு எண்ணிக்கை மையம் என மொத்தமாக 15 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வார்டுக்கு இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு உள்ளது.
175-வது வார்டு தபால் வாக்கு பெட்டி சாவி இல்லாததால் வேட்பாளர்கள் முன்னிலையில் பூட்டு உடைத்து திறக்கப்பட்டது.
சென்னையில் மொத்தமாக உள்ள 200 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததும் உடனுக்குடன் முடிவுகளை அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளது. இன்ற பிற்பகலுக்குள் முடிவுகள் தெரியவந்து விடும்
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் வேட்பாளர்களின் தலைமை முகவர்கள் மட்டும் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முகவர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்புசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கொரனா நெகட்டிவ் சான்றிதழ் கையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேட்டருக்கு வந்த ஜெகத் ரட்சகன்..
தபால் வாக்குகளில் தொடங்கி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை அனைத்து நடவடிக்கைகளும் சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Source: https://tamil.oneindia.com/news/chennai/200-wards-in-chennai-voter-turnout-in-15-centers-who-will-win-449592.html