#BREAKING || உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் சென்னை வந்தடைந்தனர் ! | #ThanthiTv – தந்தி டிவி

சென்னைச் செய்திகள்

உக்ரைனில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் இன்று சென்னை வந்தனர். அவர்களை வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் விமான நிலையத்தில் வரவேற்க உள்ளார். மேலும் பெற்றோர்களும் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர்.

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் சென்னை வந்தடைந்தனர்.

டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 5 மாணவர்கள் சென்னை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாணவர்களை வரவேற்றார்.

உக்ரைனில் இருந்து ருமேனியா வழியாக இந்தியா வந்தடைந்த மாணவர்கள்.

குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் சாகீா் அபுபக்கா், சேலத்தை சேர்ந்த சாந்தனு பூபாலன் சென்னை வருகை.

திருவல்லிக்கேணி மாணவர் ஹரிஹர சுதன், அறந்தாங்கி செல்வ பிரியா, தேனி வைஸ்ணவி சென்னை வருகை.

Source: https://www.thanthitv.com/News/TamilNadu/2022/02/27112019/3153784/Ukraine-Students-Chennai.vpf