தானியங்கி தகவல் பரிமாற்று கருவி: சென்னை விமான நிலையத்தில் துவக்கம் – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

தானியங்கி தகவல் பரிமாற்று கருவி: சென்னை விமான நிலையத்தில் துவக்கம்

பதிவு :
மார்ச்
13, 2022,
08:12
AM

சென்னை மீனம்பாக்கம் விமான வழித்தட முறைப் பணிகள் வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில், இணைய நெறிமுறையில் இயங்கும் தானியங்கி தகவல் பரிமாற்று கருவி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை மீனம்பாக்கம் விமான வழித்தட முறைப் பணிகள் வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில், இணைய நெறிமுறையில் இயங்கும் தானியங்கி தகவல் பரிமாற்று கருவி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தகவல் பரிமாற்ற நவீன கருவியை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் இயக்குனர் எம். சுரேஷ் தொடங்கி வைத்தார். சென்னை மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இக்கருவியை தயாரித்துள்ளனர். தானியங்கி தகவல் பரிமாற்றக் கருவி மூலம் உலகத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு இடையேயான விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு தகவல்கள், வானிலை தகவல்கள், விமான பாதுகாப்பு உறுதி செய்யும் தகவல்கள் உள்ளிட்டவை அதிவேகத்தில் பரிமாறிக்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: https://www.thanthitv.com/News/TamilNadu/2022/03/13081216/3184899/chennai-airport.vpf