Breaking: சென்னை அண்ணாநகர் 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

சென்னை அண்ணா நகர் 5வது அவென்யூ, சரவணபவன் அருகே 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10 தீயணைப்பு வாகனங்களில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தரை தளத்தில் தனியார் வங்கி, மற்ற தளங்களில் பல ஐடி நிறுவனங்களும், தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

சிலம்பம் சுற்றியபடி பரதநாட்டிய முத்திரைகள்; சிறுவன் உலக சாதனை!

கீழ் தளத்தில் இருக்க கூடிய வங்கியில் இருந்துதான் தீ பற்றியதாகவும், தொடர்ந்து அடுத்தடுத்த தளங்களுக்கு வேகமாக, மின் கசிவு மூலமாக, தீ பரவியிருக்கும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். நிறுவன ஊழியர்கள் தீ விபத்தில் சிக்கியிருந்தால், அவர்களை மீட்கவும் தனியாக குழு அமைக்கப் பட்டுள்ளது.

கோட்டைவிட்ட தமிழக ஆளுநர் ரவி; கெட் அவுட் சொல்லும் மத்திய அரசு?

பல தனியார் நிறுவனங்கள் செயல்படும் 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/a-fire-broke-out-in-a-5-storey-building-near-saravana-bhavan-in-anna-nagar-chennai/articleshow/90265460.cms