சென்னை: சொத்துத் தகராறில் அண்ணனை கத்தியால் வெட்டிய தம்பி | Chennai A brother was arrested for stabbing his brother in a property dispute – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

சொத்துத் தகராறில் அண்ணனை கத்தியால் வெட்டிய தம்பியை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (29), இவருடைய தம்பி சத்யா (எ) ஹெட்லைட் சத்யா (20), இவர் மீது வழிப்பறி, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள், பல்லாவரம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

image

Advertisement

இந்நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியான சத்யா, அவரது அண்ணன் முருகேசனை, சொத்து பிரச்னை காரணமாக, கொலை செய்ய முயன்று கத்தியால் வெட்டியுள்ளார். இதில் அவருக்கு இடது உள்ளங்கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. பின்னர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வெட்டிவிட்டு தப்பியோடிய சத்யாவை பல்லாவரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயாள் தலைமையிலான, போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source: https://www.puthiyathalaimurai.com/newsview/132950/Chennai-A-brother-was-arrested-for-stabbing-his-brother-in-a-property-dispute