அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சென்னை மேயர் பிரியா.. நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னை கண்ணகி நகரில்  உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை அழகுபடுத்தும் விதமாக வரையப்பட்ட ஓவியங்களை திறந்த வைத்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், பின்னர் அங்கிருந்த அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் கலப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மேயர் பிரியா ராஜன் சென்னை கண்ணகிநகரில் ஆய்வு மேற்கொண்டபோது பேட்டி.

சென்னை ஒ.எம்.ஆர் சாலை கண்ணகி நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை அழகுபடுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி மற்றும் எஸ்.டி ஆர்ட் இந்திய நிறுவனம் இணைந்து வரைந்த சுவர் ஓவிய திறப்பு விழாவை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் துவங்கிவைத்தார்.

அதை தொடர்ந்து குடியிருப்புகளில் வரையப்பட்டிருந்த ஓவிய காட்சிகளை சென்னை மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர், சட்டமன்ற உறுப்பினர் என அனைவரும் பார்வையிட்டடனர்.

இதையும் படிங்க: பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து.. 3 பேர் உயிரிழப்பு – மர்மநபர்கள் தப்பி ஓட்டம்

பின்னர் அந்த பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மருத்துவமனைக்கு திடீரென சென்ற சென்னை மேயர் பிரியா ராஜன் மருத்துவனையில் குறைகள் ஏதேனும் உள்ளதா என்றும்  கூடுதல் உபகரணங்கள் தேவைப்படுகிறதா என்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பிரசவ வார்டு மற்றும் பொது வார்டுகளை ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்றிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா ராஜன் ,
சுவர் ஓவியங்களை  சிறப்பாக வரைந்துள்ளனர். இந்த பகுதியோடு இது முடிந்துவிடாமல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிங்க: சென்னையில் 90 விழுக்காடு பேருந்துகள் ஓடவில்லை.. பொதுமக்கள் அவதி..

மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பது குறித்த கேள்விக்கு, புதிய திட்டங்களை கொண்டு செயல்பட்டு வருவதாகவும் தமிழக முதல்வர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் மேலும் இதுபோன்று நடக்காது என்றும் அவர் தெரிவித்தார். உடன் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் தா.விஸ்வநாதன், ஏகாம்பரம், முருகேசன், சங்கர், ஸ்டெல்லா ஜாஸ்மீன் ரத்னா உள்ளிட்ட ஏராளமானோர் இருந்தனர்.

செய்தியாளர்: வினோத் – ஈசிஆர் 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-chennai-corporation-mayor-priya-rajan-inspected-government-hospital-kannagi-nagar-mur-722854.html