IPL: Punjab set a target of 181 for Chennai …! || ஐபிஎல் : சென்னை அணிக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்…! – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

இன்று நடைபெற்று வரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை மோதுகின்றன .

மும்பை,

15-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இன்று நடைபெற்று   வரும்   போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை மோதுகின்றன .

இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .இதில் டாஸ் வென்ற சென்னை அணி  பந்துவீச்சை தேர்வு  செய்துள்ளது  .அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது 

 பஞ்சாப் அணி தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தாலும் , லிவிங்ஸ்டன்  சென்னை அணியின் பந்துவீச்சை   பவுண்டரி ,சிக்ஸர்க்கு பறக்க விட்டார்.

முகேஷ் சௌத்ரியின் ஒரு ஓவரில் 2 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் 27 பந்துகளில் 5 சிக்ஸர் ,4 பவுண்டரி என அரைசதம் அடித்தார் .

ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி  200 ரன்களுக்கு மேல்  குவிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ,லிவிங்ஸ்டன் 60 ரன்களில் ஆட்டமிழந்தார் . 

பின்னனர் வந்த வீரர்கள் அடுத்ததடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில்  20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது .

சென்னை அணி சார்பில் பிரிட்டோரியஸ் ,ஜோர்டன்  ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2022/04/03213413/IPL-Punjab-set-a-target-of-181-for-Chennai.vpf