பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில், கச்சுகுடா எக்ஸ்பிரஸ், கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள திருவலத்தில் கோவை, பெங்களூரு-சென்னை ரெயில் பாதையில் இன்று காலை மின்ஒயர் அறுந்து விழுந்தது.
இதனால் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில், கச்சுகுடா எக்ஸ்பிரஸ், கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
காட்பாடி ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் ஒயர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும் வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
[embedded content]
Source: https://www.maalaimalar.com/news/district/2022/04/21130356/3694929/Tamil-News-chennai-trains-delayed-near-katpadi.vpf