சென்னை: ஆண் நண்பருடன் பேச்சு; காட்டிக் கொடுத்த கால் ரெக்காடர் – காதல் மனைவியைக் கொலை செய்த கணவர் – Vikatan

சென்னைச் செய்திகள்

இதையடுத்து சரிதா, இனிமேல் ஆண் நண்பருடன் போனில் பேச மாட்டேன் என்று கணவரிடம் தெரிவித்தாராம். ஆனால் மீண்டும் சரிதா போனில் பேசத் தொடங்கினார். அதனால் ஆத்திரமடைந்த புகழ், கடந்த மூன்று நாள்களுக்கு முன் இரவில் மனைவியிடம் சண்டை போட்டார். அப்போது தகராறு முற்றியதில் மனைவியை புகழ் தாக்கியுள்ளார். அதன்பிறகு புகழ், வீட்டில் தூங்கி விட்டார். காலையில் கண் விழித்த புகழ், மனைவி சரிதா சுயநினைவில்லாமல் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு சரிதா, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

சரிதாவை பரிசோதித்த டாக்டர்கள், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி தெரிவித்தனர். அதனால் சரிதாவை புகழ், அங்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி சரிதா உயிரிழந்தார். இதையடுத்து தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சரிதாவின் தாயார் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கொலை வழக்கு பதிவு செய்த கண்ணகி நகர் போலீஸார் ஆட்டோ டிரைவர் புகழை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணையும் நடந்துவருகிறது.

Source: https://www.vikatan.com/news/crime/wife-murdered-by-husband-got-arrested-in-chennai