தமிழகத்திலேயே சென்னை மக்களின் மின்நுகர்வு 25%: பீக்ஹவர் மின்நுகர்வில் சாதனை – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழக மின்வாரிய அதிகாரி கூறியதாவது: கடந்த ஏப்ரல் 29ம் தேதி தமிழ்நாட்டின் மின் நுகர்வு 17,563 மெகாவாட் மற்றும் ஒரு நாளைய மொத்த மின் நுகர்வு 388.08 மில்லியன் யூனிட் என்ற அளவில் இருந்தது. கோடை காலம் என்பதால் வீடுகள், அலுவலகங்களில் ஏசி பயன்பாடு அதிகரித்து மின் தேவையும் அதிகரித்து வருகிறது. இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும். நடப்பு ஆண்டு கோடை காலத்தில் சென்னையின் மின் தேவை 3,100 மெகாவாட் என்ற அளவில் இருந்து குறையவே இல்லை. கடந்த 2 ஆண்டுகளில் சென்னையின் பீக் ஹவர் மின் தேவை 3 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=771891