அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘ஜாக்பாட்’…. IIT மெட்ராஸ் அறிவித்த வேற லெவல் கோடைகால பயிற்சி திட்டம்! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) மெட்ராஸ் கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) அடிப்படையில் கோடைக்கால பயிற்சி வகுப்புகளாக நடத்தப்படும். மேலும், இது ஜூன் 20 முதல் 25, 2022 வரை நடைபெற ஏற்பாடு செய்யப்படுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இருந்து குறைந்தது ஒரு லட்சம் மாணவர்களைச் சென்றடைவதை இந்த நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கல்வித் துறையின் மாறிவரும் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த திட்டம் ஆன்லைன் அமைப்பில் மட்டுமே நடத்தப்படும். இது ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் கற்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை தொடங்க தற்போது 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐஐடி மெட்ராஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் மாணவர்களின் ஆர்வத்தைத் தொடர கற்பித்தல் மற்றும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சென்னை IIT-யில் 2 வருடம் MA படிப்புகள் அறிமுகம்… HSEE நுழைவு தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை!!
சென்னை ஐஐடி திட்டம் குறித்து கல்வித்துறை அமைச்சர் ஆம்பில் மகேஷ் கூறுகையில்., இத்திட்டத்திற்கு மாணவர்களை தேர்வு செய்யும் போது தாழ்த்தப்பட்ட தொகுதி மாணவர்களுக்கு துறை முக்கியத்துவம் அளித்துள்ளது. இந்த 100 மாணவர்களும் ஒரு ஆரம்பம் தான், மேலும் பல மாணவர்கள் பின்னர் கொண்டு வரப்படுவார்கள். இந்த திட்டத்தில் 70 சதவீத பாடநெறி நடைமுறை மற்றும் மீதமுள்ளவை கோட்பாடு அடிப்படையிலானவை.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது., “அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (Science, Technology, Engineering and Mathematics – STEM) ஆகிய பாடங்கள் கிராமப்புற பள்ளி மாணவர்களைச் சென்றடையும் வகையில் கோடைகாலப் பயிற்சி வகுப்பை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) ஜூன் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்துகிறது.

இளம் மாணவர்களை ஊக்குவித்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக ஆக்கப்பூர்வமாகவும், புதுமையாகவும் சிந்திக்கும் ஆர்வத்தை அவர்களிடையே தூண்டச் செய்வதுதான் இதன் நோக்கம். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் பாடங்கள் கற்பிக்கப்படும்.
imageJEE Main Admit Card 2022: JEE மெயின் 2022 ஹால் டிக்கெட் வெளியீடு – ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்வது?
இந்த பயிற்சித் திட்டத்தை ஆன்லைன் முறையில் செயல்படுத்தி, இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கச் செய்ய இக்கல்வி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

அடிப்படை கோட்பாடுகள் பற்றிய அறிவை வழங்கி மாணவர்களை ஊக்குவிப்பதும், பரந்த அளவில் சிந்திக்க உதவும் அனுபவங்களை அவர்களுக்கு வழங்குவதும்தான் இதன் மையக்கருத்தாகும்.

ஐஐடி மெட்ராஸ்-ன் கோடைகாலப் பயிற்சி மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகிய பாடங்கள் கிராமப்புற பள்ளி மாணவர்களைச் சென்றடையும் திட்டத்தை திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ஐஐடி மெட்ராஸ் மின்சாரப் பொறியியல் துறை பேராசிரியர்களான பேரா. ஆர்.சாரதி, பேரா. அன்பரசு மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் இன்று (20 ஜூன் 2022) நடைபெற்ற தொடக்க விழாவில் உரையாற்றிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், இந்த ஐந்து நாட்கள் உங்கள் (மாணவர்கள்) வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். இத்திட்டம் அரசுப் பள்ளி மாணவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்….

மாணவர்களின் பெருமைக்குரிய இடமாக அரசுப் பள்ளிகள் மாற வேண்டும் என்பதில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதியாக உள்ளார். வேலை தேடுவோருக்கு பதிலாக வேலைகளை உருவாக்குவோராக மாணவர்களை ஊக்குவிக்க இத்திட்டம் உதவும். ஸ்டெம் (STEM) கல்வி பெருமளவில் ‘கற்றல் விளைவுகளை’ மேம்படுத்தும் எனத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் தொடக்கமாக முதலாவது பேட்ச்சில், கிராமப் புறங்களில் இருந்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் 100 மாணவர்கள் இருப்பிட கோடைகாலப் பயிற்சிக்காக (residential summer program) ஐஐடி மெட்ராஸ்-க்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். பொறியியல் துறையில் சுற்றுச்சூழல் மற்றும் மின்னணு அம்சங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் தொழில்நுட்ப வளர்ச்சி,
imageArts college admission 2022: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதி மாற்றம்..!
பயன்பாட்டுக் கணிதம் உள்ளிட்ட அடிப்படை அறிவியல் தொடர்பான தலைப்புகள் இடம்பெறும். அரியலூர், கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் வந்துள்ளனர்.

மாணவர்களை இந்த வளாகத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை இக்கல்வி நிறுவனம் செய்திருப்பதுடன், உணவு மற்றும் தங்குமிட வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 100 மின்னணு பரிசோதனைகளை மாணவர்கள் மேற்கொள்ளும் வகையில் சிறப்புக் கருவி ஒன்றும் தயார் செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.

Source: https://tamil.samayam.com/education/news/iit-madras-launches-summer-program-to-govt-school-students-stem/articleshow/92379666.cms