சென்னையில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரோகித்குமார் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர்(ஆர்.பி.எப்) மற்றும் இன்ஸ்பெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையிலான ஆர்.பி.எப் புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் டெல்லியில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் 1-வது நடைமேடையில் வந்து நின்றது. அந்த ரெயிலின் சரக்கு பெட்டியில் சில பார்சல்கள் சந்தேகமூட்டும் வகையில் இருந்தது. இதையடுத்து அந்த பார்சல்களை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதே போல் மொத்தல் 26 பார்சல்களில் சிகரெட்டு பாக்கெட்டுகள் இருந்தன.

இந்த பார்சல்களுக்கு யாரும் உரிமம் கோரவில்லை. இதையடுத்து சுமார் ரூ.90 லட்சம் மதிப்புள்ள அந்த சிகரெட்டு பார்சல்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு சுங்க இலாக்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. டெல்லியில் இருந்து இந்த பார்சல்களை அனுப்பியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/foreign-cigarette-packets-worth-rs-90-lakh-seized-in-chennai-750441