பலான இரவுகள்… சென்னை அழகியின் ஹோட்டல் வாழ்க்கை… விழி பிதுங்கும் போலீசார் – Tamil Samayam

சென்னைச் செய்திகள்
சென்னை, பூந்தமல்லி, முத்து நகரை சேர்ந்தவர் சேகர் (40). இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவரது தம்பி ராஜேஷ் (37). i இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இருவரும் குடும்பத்துடன் தாய் தமிழ்செல்வியுடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜேஷ் பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், எனது அண்ணன் சேகர் அவரது மனைவி மற்றும் தனது மனைவி ஆகியோரின் 500 பவுன் தங்க நகைகளையும், வீட்டில் இருந்த 7 தங்க கட்டிகளையும் திருடி அவரது கள்ளகாதலியான சுவாதி (22) என்ற பெண்ணுக்கு கொடுத்துள்ளதாகவும், சேகர் மீதும் சுவாதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் வள்ளி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும், சேகர் சுவாதிக்கு வாங்கி கொடுத்த காரையும் பறிமுதல் செய்தனர். ஆனால், நகைகள் இன்னும் மீட்கப்படவில்லை.

அதிர்ச்சி தகவல்

இந்த நிலையில், சேகர் திருடி கொடுத்த நகைகளை குறித்து போலீசார் சுவாதியிடம் விசாரணை நடத்தியபோது சுவாதி அளித்த பதில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சேகர் கொடுத்த 550 சவரன் நகைகள் எங்கே என்று சுவாதியிடம் கேட்டபோது, சேகரின் வீட்டார் என்னை கடத்தி கத்தியை காட்டி மிரட்டி அந்த நகைகளை வாங்கிக்கொண்டதாக சுவாதி கூறினார். ஆனால், அதில் முகாந்திரம் இல்லை. தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது பல உண்மைகள் வெளியாகின. பைனான்ஸ் தொழில் செய்து வரும் சேகருக்கு வேறொரு நபர் மூலம் சுவாதி அறிமுகமாகியுள்ளார். சுவாதி இளம்வயது பெண் மட்டுமின்றி மாடல் அழகியும்கூட. இந்நிலையில், சுவாதியுடன் சேகருக்கு திருமணஉறவை மீறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. சேகரும் வசதியானவர் என்பதால் சுவாதி சேகரை வளைத்து போட்டுகொண்டுள்ளார். இருவரும் அடிக்கடி நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து சந்தித்து வந்துள்ளனர்.

மேலும், சுவாதிக்கு பல பாய் பிரண்ட்ஸ் இருந்தாலும் சேகர் போன் அடித்துவிட்டால் சிட்டுக்குருவியை போல சொல்லும் இடத்துக்கு சுவாதி வந்துவிடுவாராம். ஒவ்வொரு முறை ரூம் போடும்போதும் சுவாதிக்கு சேகர் வீட்டில் உள்ள நகைகளை பரிசாக கொடுத்து வந்துள்ளார். அந்த நகைகளை தனது பாய் பிரண்ட்ஸ்களுக்கு சுவாதி செலவழித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், சுவாதிக்கு பல லட்சங்களையும், நகைகளையும் செலவழித்து வந்த சேகர் கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார். அந்த காரை மட்டும்தான் போலீசார் தற்போது பறிமுதல் செய்துள்ளனர்.

பல பாய் பிரண்ட்ஸ்

swathi

இதுவரை சேகரும் சுவாதியும் ஊட்டி, கோவை என இன்ப சுற்றுலா சென்று தங்கி வந்துள்ளனர். தற்போதும் கூட தாய்லாந்துக்கு செல்ல டூரிட் விசா எடுத்துள்ளனர். அதற்குள் போலீசில் மாட்டிக்கொண்டதால் அந்த பிளான் நின்றுவிட்டது. ஒருநாள் இருவரும் கோவாவில் இருந்தபோது சுவாதியின் ஆண் நண்பர்களும் அந்த ஹோட்டலுக்கு வந்துள்ளனர். அப்போது, சுவாதி மீது சேகர் ஆத்திரமடைந்து சண்டையிட்டுள்ளார். பின்னர் சுவாதி சேகரை சமாதானம் செய்து வைத்து சந்தோசப்படுத்தியுள்ளார்.

இதுவரை சேகர் கொடுத்த நகைகளை சுவாதி தனது நண்பர்களுக்கு செலவழித்து அடிக்கடி ஹோட்டலில் செலவழித்து வந்ததாக தெரிய வருகிறது. சுவாதிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவனை பிரிந்துள்ளார். அந்த நபர் யார் மற்றும் சுவாதிக்கு எத்தனை பாய் பிரண்ட்ஸ் இருக்கிறார்கள் என்பதை கண்டறிது அவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதற்கு பிறகே நகைகளை மீட்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

Source: https://tamil.samayam.com/latest-news/crime/shocking-confession-given-by-young-woman-arrested-with-financier-in-gold-theft-case-in-chennai/articleshow/93497722.cms